சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS   Gujarathi   Marati  Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian   Spanish   Hebrew  

நான்காம் ஆயிரம்   நம்மாழ்வார்  
திருவாய் மொழி  

Songs from 2899.0 to 4000.0   ( )
Pages:    Previous   1  2  3    4  5  6  7  8  9  10  Next  Next 10
நீ அலையே? சிறு பூவாய் நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன நுவலாதே இருந்தொழிந்தாய்
சாயலொடு மணி மாமை தளர்ந்தேன் நான் இனி உனது
வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே   



[2939.0]
நாடாத மலர் நாடி நாள்தோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று
வீடாடி வீற்றிருத்தல் வினை அற்றது என் செய்வதோ?
ஊடாடு பனி வாடாய் உரைத்து ஈராய் எனது உடலே   



[2940.0]
Back to Top
உடல் ஆழிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்க்
கடல் ஆழி நீர் தோற்றி அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால் இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே வினையோம் ஒன்றாம் அளவே   



[2941.0]
அளவு இயன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கு பெரு வளமே     



[2942.0]
வள ஏழ் உலகின் முதலாய
      வானோர் இறையை அருவினையேன்
களவேழ் வெண்ணெய் தொடு உண்ட
      கள்வா என்பன் பின்னையும்
தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்
      வல் ஆன் ஆயர் தலைவனாய்
இள ஏறு ஏழும் தழுவிய
      எந்தாய் என்பன் நினைந்து நைந்தே     



[2943.0]
நினைந்து நைந்து உள் கரைந்து உருகி
      இமையோர் பலரும் முனிவரும்
புனைந்த கண்ணி நீர் சாந்தம்
      புகையோடு ஏந்தி வணங்கினால்
நினைந்த எல்லாப் பொருள்கட்கும்
      வித்துஆய் முதலில் சிதையாமே
மனம் செய் ஞானத்து உன் பெருமை
      மாசூணாதோ? மாயோனே   



[2944.0]
மா யோனிகளாய் நடை கற்ற
      வானோர் பலரும் முனிவரும்
நீ யோனிகளைப் படை என்று
      நிறை நான்முகனைப் படைத்தவன்
சேயோன் எல்லா அறிவுக்கும்
      திசைகள் எல்லாம் திருவடியால்
தாயோன் எல்லா எவ் உயிர்க்கும்
      தாயோன் தான் ஓர் உருவனே



[2945.0]
Back to Top
தான் ஓர் உருவே தனி வித்து ஆய்
      தன்னின் மூவர் முதலாய
வானோர் பலரும் முனிவரும்
      மற்றும் மற்றும் முற்றும் ஆய்
தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே
      தோற்றி அதனுள் கண்வளரும்
வானோர் பெருமான் மா மாயன்
      வைகுந்தன் எம் பெருமானே   



[2946.0]
மான் ஏய் நோக்கி மடவாளை
      மார்பில் கொண்டாய் மாதவா
கூனே சிதைய உண்டை வில்
      நிறத்தில் தெறித்தாய் கோவிந்தா
வான் ஆர் சோதி மணிவண்ணா
      மதுசூதா நீ அருளாய் உன்
தேனே மலரும் திருப்பாதம்
      சேருமாறு வினையேனே   



[2947.0]
வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்
      விண்ணோர் தலைவா கேசவா
மனை சேர் ஆயர் குல முதலே
      மா மாயனே மாதவா
சினை ஏய் தழைய மராமரங்கள்
      ஏழும் எய்தாய் சிரீதரா
இனையாய் இனைய பெயரினாய்
      என்று நைவன் அடியேனே     



[2948.0]
அடியேன் சிறிய ஞானத்தன்
      அறிதல் ஆர்க்கும் அரியானை
கடி சேர் தண் அம் துழாய்க் கண்ணி
      புனைந்தான் தன்னை கண்ணனை
செடி ஆர் ஆக்கை அடியாரைச்
      சேர்தல் தீர்க்கும் திருமாலை
அடியேன் காண்பான் அலற்றுவன்
      இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே?   



[2949.0]
உண்டாய் உலகு ஏழ் முன்னமே
      உமிழ்ந்து மாயையால் புக்கு
உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்
      உவலை ஆக்கை நிலை எய்தி
மண் தான் சோர்ந்தது உண்டேலும்
      மனிசர்க்கு ஆகும் பீர் சிறிதும்
அண்டாவண்ணம் மண் கரைய
      நெய் ஊண் மருந்தோ? மாயோனே   



[2950.0]
Back to Top
மாயோம் தீய அலவலைப்
      பெரு மா வஞ்சப் பேய் வீயத்
தூய குழவியாய் விடப் பால்
      அமுதா அமுது செய்திட்ட
மாயன் வானோர் தனித் தலைவன்
      மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்
தாயோன் தம்மான் என் அம்மான்
      அம்மா மூர்த்தியைச் சார்ந்தே     



[2951.0]
சார்ந்த இரு வல் வினைகளும்
      சரித்து மாயப் பற்று அறுத்து
தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்
      திருத்தி வீடு திருத்துவான்
ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி
      அகலம் கீழ் மேல் அளவு இறந்து
நேர்ந்த உருவாய் அருவாகும்
      இவற்றின் உயிராம் நெடுமாலே   



[2952.0]
மாலே மாயப் பெருமானே
      மா மாயவனே என்று என்று
மாலே ஏறி மால் அருளால்
      மன்னு குருகூர்ச் சடகோபன்
பால் ஏய் தமிழர் இசைகாரர்
      பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும்
      வல்லார்க்கு இல்லை பரிவதே   



[2953.0]
பரிவது இல் ஈசனைப் பாடி
விரிவது மேவல் உறுவீர்
பிரிவகை இன்றி நல் நீர் தூய்
புரிவதுவும் புகை பூவே       



[2954.0]
மதுவார் தண் அம் துழாயான்
முது வேத முதலவனுக்கு
எது ஏது என் பணி என்னாது
அதுவே ஆள் செய்யும் ஈடே       



[2955.0]
Back to Top
ஈடும் எடுப்பும் இல் ஈசன்
மாடு விடாது என் மனனே
பாடும் என் நா அவன் பாடல்
ஆடும் என் அங்கம் அணங்கே     



[2956.0]
அணங்கு என ஆடும் என் அங்கம்
வணங்கி வழிபடும் ஈசன்
பிணங்கி அமரர் பிதற்றும்
குணங்கெழு கொள்கையினானே     



[2957.0]
கொள்கை கொளாமை இலாதான்
எள்கல் இராகம் இலாதான்
விள்கை விள்ளாமை விரும்பி
உள் கலந்தார்க்கு ஓர் அமுதே   



[2958.0]


Other Prabandhams:
    திருப்பல்லாண்டு     திருப்பாவை     பெரியாழ்வார் திருமொழி     நாச்சியார் திருமொழி         திருவாய் மொழி     பெருமாள் திருமொழி     திருச்சந்த விருத்தம்     திருமாலை     திருப்பள்ளி எழுச்சி     அமலன் ஆதிபிரான்     கண்ணி நுண் சிறுத்தாம்பு     பெரிய திருமொழி     திருக்குறுந் தாண்டகம்     திரு நெடுந்தாண்டகம்     முதல் திருவந்தாதி     இரண்டாம் திருவந்தாதி     மூன்றாம் திருவந்தாதி     நான்முகன் திருவந்தாதி     திருவிருத்தம்     திருவாசிரியம்     பெரிய திருவந்தாதி     நம்மாழ்வார்     திரு எழு கூற்றிருக்கை     சிறிய திருமடல்     பெரிய திருமடல்     இராமானுச நூற்றந்தாதி     திருவாய்மொழி     கண்ணிநுண்சிறுத்தாம்பு     அமலனாதிபிரான்     திருச்சந்தவிருத்தம்    
This page was last modified on Thu, 09 May 2024 20:23:06 -0400
 
   
    send corrections and suggestions to admin-at-sivaya.org

divya prabandham song